லிபுர்துவார்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா எனக் கேட்டுள்ளார்

நாடெங்கும் வரும் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அவ்வகையில் மேற்கு வங்க மாநிலம் அலிபர்துவாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார். 

மம்தா தனது உரையில் .

“தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏதேனும் ஒரு கலவரம் நடந்தால் கூட ஆணையத்திற்கு வெளியே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன்,பா.ஜ.க.வின் உத்தரவின் பேரில் முர்ஷிதாபாத் காவல்துறை துணை ஆணையரைத் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

இப்போது, முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் கலவரம் நடந்தால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பாகும். கலவரம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில், போலீஸ் அதிகாரிகளை மாற்ற பா.ஜ.க. விரும்புகிறது

நேற்று திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.அபிஷேக் பானர்ஜியின் ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது. இதே போல் தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபடும் பா.ஜ.க தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா?”

என்று கேள்வி எழுப்பி உள்ளார்.