டில்லி

நாடாளுமன்ற உரிமைக் குழு மக்களவை காங்கிரஸ் த;லைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை ரத்து செய்துள்ளது.

கடந்த 10 ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமரின் உரைக்கு இடையே அடிக்கடி குறுக்கிட்டார். எனவே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இந்த பிரச்சினை, உரிமைக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உரிமைக்குழு முன்பு ஆஜராகி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததை அடுத்து, அவர் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்ய உரிமைக்குழு கடந்த மாதம் 30-ந் தேதி சிபாரிசு செய்தது. அதே நாளில் அதை ஏற்றுக்கொண்டு, இடைநீக்கத்தைச் சபாநாயகர் ஓம்பிர்லா ரத்து செய்தார்.

நேற்று இடைநீக்கத்தை ரத்து செய்யச் சிபாரிசு செய்யும் உரிமைக்குழு அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது., நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் குறித்த விவாதத்தில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கலந்து கொண்டு பேசினார். அவர் நாட்டில் ஒரு கட்சி சர்வாதிகாரம் திணிக்கப்படுவதாக மக்கள் மனங்களில் சந்தேகம் நிலவுவதாகப் பேசினார்.