டில்லி

ன்று தொடங்கும்   நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஆண்டு தோறும் நாடாளுமன்ற முதல் கூட்டம் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.

இது புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடராகும். நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  இந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிற உள்ளது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பீகார் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.