சென்னை

பிப்ரவரி 1 ஆம் தேதி அயோத்திக்குச் சென்னை உள்ளிட 8 நகரங்களிலிருந்து தினசரி விமானச் சேவை தொடங்க உள்ளது, 

 

கடந்த 22 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதில் குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலுக்குத் தினசரி செல்கின்றனர்.

எனவே வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை-அயோத்தி இடையேயான தினசரி விமானச் சேவையை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, மும்பை, பெங்களூர், ஆமதாபாத், பாட்னா, மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர் நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினசரி விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.