டில்லி

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

வரும் 18 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடர்  நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் என்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

இரு அவைகளின் செயலகங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் செப்டம்பர் 18-ந்தேதி முதல் மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தொடர்கள் நடைபெறும். 5 அமர்வுகள் கொண்ட இந்த தொடரின் தற்காலிக நிகழ்ச்சிநிரல் தொடர்பாகத் தனியே தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.

இந்த தொடர் கேள்வி நேரமின்றி நடைபெறுகிறது.  கூட்டம் புது நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது

மத்திய அரசு. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளதால், நடப்பு மக்களவையின் கடைசி கூட்டத்தொடராக இந்த சிறப்புக் கூட்டத்தொடர் இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.