டில்லி

டில்லியில் மாசு அதிகரிப்பால் தனியார் வாகனங்களின் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.  அரசு சார்பில் காற்று மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் காற்று மாசுபடுவது சிறிதளவும் குறையவில்லை

எனவே டில்லி அரசு தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்க  முயன்று வருகிறது.  அதன்படி டில்லியில் தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், பார்க்கிங் தளங்களுக்கான கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

டில்லி அர்சு காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, 31 ஜனவரி 2024 வரை டெல்லியில் தனியார் வாகனங்களின் பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த முடிவு மோசமான காற்று மாசுபாட்டினை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.