சியோல்: பெண்களுக்கான கொரியன் சாம்பியன்ஷிப் கோல்ஃப் தொடரில், உள்நாட்டு வீராங்கனை பார்க் ஹியுன் ஹியங் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடங்கியிருந்த விளையாட்டுத் தொடர்கள், தற்போது ஒவ்வொன்றாக நடைபெறத் துவங்கியுள்ளன. பார்வையாளர்கள் இல்லாமல் அவை நடைபெறுகின்றன.
அந்தவகையில், தென்கொரியாவில் நடைபெறக்கூடிய கொரியன் சாம்பியன்ஷிப் கோல்ஃப் உலகளவில் பிரபலமான ஒன்றாகும். இதில், உள்நாட்டு வீராங்கனை ஹியுன் ஹியங் சாம்பியன் ஆனார்.
கடந்த 2018ம் ஆண்டில்தான் இவர் தொழில்முறை போட்டிகளுக்கு மாறினார். அதிலிருந்து, இவர் வெல்லக்கூடிய முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். இதன்பொருட்டு, இவருக்கு இந்திய மதிப்பில் ரூ.1.35 கோடி பரிசுத்தொகை கிடைத்தது.
தென்கொரியாவின் பே சியோன் ஊ மற்றும் லிம் ஹீ ஜியோங் ஆகியோருக்கு அடுத்த 2 இடங்கள் கிடைத்தன.