சென்னை:
மிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்க உள்ளது.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் இன்று முதல் பயணிகள் சேவையுடன் பார்சல் மற்றும் கூரியர் சேவையையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக நாளை முதல் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூர் ஆகிய 7 நகரங்களில் இருந்து சென்னைக்கு பார்சல் சேவையை தொடங்க உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.