டெல்லி: ஆஸ்திரேலிய மண்ணில், இந்தியா பெற்ற வெற்றிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், இந்திய கிரிக்கெட் வீரர்களான, மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்ட பன்ட் மற்றும் சுந்தர் ஆகியோருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முக்கியமான கட்டத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 1 சிக்ஸர்  2 பவுண்டரிகளுடன் 22 ரன்களை அடித்து சிறப்பான பங்களிப்பை அளித்தார். மயங்க் அகர்வால் மற்றும் ஷர்துல் தாகுர் விரைவில் ஆட்டமிழந்தாலும் ரிஷப் பன்ட் இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 89 ரன்களை விளாசினார். இந்திய அணி 97 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்களை எடுத்து வென்றது. இன்றைய போட்டியின் கதாநாயகன்களாக, இளம் வீரர்கள் ஷப்மன் கில்லும் ரிஷப் பன்ட்டும் பரிண‍மித்துள்ளார்கள்.

இந்த நிலையில், முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், இந்திய இளம் வீரர்களுக்கு புகழாரம் சூட்டி, டிவிட் பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டில், சில ஆண்டுகளுக்கு முன்பு, 19வயதுக்குட்பட்ட உலகக்கோப்பையில், பன்ட், சுந்தர் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள், அவர்கள் பந்து வீச்சும்  துப்பாக்கியில் இருந்த கிளம்பிய குண்டுபோல சிறப்பாக இருந்தது.

இன்று அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில், சிறப்பாக ஆடி, மிகப்பெரிய சாதனைக்கு நம்மை அழைத்துச் செல்வார்கள் என்று யார்  நினைத்திருப்பார்கள், என்று பதிவிட்டுள்ளார்.