ண்டிகர்

ஞ்சாப் முதல்வர் பகவத் மான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழு கட்ட்ப்பட்டில் உள்ளதாக ஆளுநருக்குப் பதில் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப்பில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகக்  குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இது குறித்து உரிய விளக்கம் அளிக்காவிட்டால் குடியரசுத் தலைவர்  ஆட்சியைப் பரிந்துரைக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இன்று சண்டிகரில் செய்தியாளர்களை அம்மாநில முதல்வர் பகவந்த் மான் சந்தித்துள்ளார்.,

அப்போது அவர்,

”குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கூறியதன் மூலம் அமைதியை விரும்பும் பஞ்சாப் மக்களை ஆளுநர் அச்சுறுத்தி இருப்பதாகத் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்றது முதல் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது

இதுவரை இந்த மாதத்தில் மட்டும் 41 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 753 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்  தற்போது பஞ்சாப்பில் சட்டம்-ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது”

எனத் தெரிவித்துள்ளார்.