சிட்னி: இந்திய அணியின் மிடில் ஆர்டரில், ரன்களைக் குவிக்கும் ஒரு பேட்ஸ்மேனாக, அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஹர்திக் பாண்ட்யா நிலைத்திருப்பார் என்று பாராட்டு தெரிவித்தார் கேப்டன் விராத் கோலி.

உடல்நிலை காரணமாக, தன்னால் பந்துவீச முடியாத சூழலில், ஒருநாள் & டி-20 தொடரில் சிறப்பாக செயல்பட்டார் ஹர்திக் பாண்ட்யா. டி-20 தொடரில், தொடர் நாயகன் விருதையும் வென்றார் அவர்.

இந்நிலையில், அவர் குறித்து கேப்டன் விராத் கோலி கூறியுள்ளதாவது, “பாண்ட்யா, இயற்கையிலேயே அபார திறமை கொண்டவர். தற்போது டி-20 விளையாட்டில் அவர் நல்ல அனுபவம் பெற்றுள்ளார்.

இது அவருக்கான நேரம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்கு, இந்திய அணிக்கான ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவர் இருப்பார். இதனால், எங்கும், எப்போதும் நம்மால் வெற்றியை ஈட்ட முடியும்.

அத்தகைய ஒரு ஃபினிஷர்தான் நமக்குத் தேவை. நமக்காக அவர் கிடைத்துள்ளார். அவருக்கு ரன் பசி உள்ளது மற்றும் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறார்” என்றுள்ளார் விராத் கோலி.