சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர் வெற்றியில், தனக்கு வழங்கப்பட்ட மேன் ஆஃப் த சீரிஸ் விருதை, நடராஜனிடம் கொடுத்து பலரையும் கவர்ந்துள்ளார் பாண்ட்யா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை, 2-1 என்ற கணக்கில் வென்று, கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி. இத்தொடரில், அதிரடியாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவுக்கு மேன் ஆஃப் த சீரிஸ் விருது வழங்கப்பட்டது.

ஆனால், இந்த விருதுக்கு இந்திய அணியில் முதன்முதலாக இடம்பெற்ற நடராஜன்தான் பொருத்தமானவர் எனக்கூறி, அவரிடம் அதைக் கொடுத்து மகிழ்ந்தார்.

“நடராஜனே, இந்தத் தொடரில் உங்களின் செயல்பாடு அருமையாக இருந்தது. உங்கள் திறமை மற்றும் கடின முயற்சி குறித்து, இத்தொடர் நிறையவே பேசும். என்னைப் பொறுத்தவரை, இந்த மேன் ஆஃப் த சீரிஸ் விருதைப் பெறுவதற்கு நீங்களே பொருத்தமானவர். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்..!” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடராஜன்.

இந்த டி-20 தொடரில், அதாவது, தான் பங்கேற்ற முதல் சர்வதேச தொடரிலேயே, மொத்தம் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.