கீழடி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் ஒன்று கிடைத்துள்ளது.

தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைய அகழாய்வின்போது 120 சென்டி மீட்டர் ஆழத்தில் யானை தந்தத்தினாலான கருப்பு நிற ஆட்டக்காய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் வாயிலாக கீழடியில் மேம்பட்ட தமிழ்ச் சமூகம் வாழ்ந்ததற்கானச் சான்று கிடைத்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]