ஸ்லாமாபாத்

 பாகிஸ்தான் அரசு அடுத்த மாதம் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான்கானின் அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வழியே நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்நாட்டில், அரசியல் நிலைத்தன்மையற்ற நிலை நீடித்து வருகிறது.

அந்நாட்டு நாடாளுமன்றம் நடப்பு ஆண்டின் ஆகஸ்டு 9ஆம் தேதி கலைக்கப்பட்டது. ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்தது.  பாகிஸ்தானில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.

ஆயினும் தேர்தல் நடத்துவது தள்ளிப் போய் வந்த நிலையில் தற்போது அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது.  அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

ஜியோ நியூஸ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் தேதியைப் பற்றிய விவரங்களை உச்சநீதிமன்றத்தில் பகிர்ந்து கொண்டார் எனத் தெரிவித்துள்ளது.