மும்பை:

பத்மாவத் திரைப்படம் திருட்டுத்தனமாக முகநூலில் வெளியிடப்பட்டதை மூன்றரை லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், `பத்மாவத்’ ஆகும்.

இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது’ என்று மத்தியப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் தெரிவித்திருந்தன. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், `பத்மாவத்’ திரைப்படம் இன்று இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. இதனை எதிர்த்து மத்தியப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது. இந்த நிலையில் பத்மாவத் முழு படமும் பேஸ்புக் பக்கம் மூலம் கசிந்தது.

‘ஜாடன் கா அதா’ என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ள இத்திரைப்பட இணைப்பை , 15,000 க்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர் தவிர 3.5 லட்சம் பேர் இப்படத்தை பார்த்துள்ளனர். இத்திரைப்பரடம் வெளியான ஒரு திரையரங்கில் இருந்து இருந்து நேரடியாக இது ஒளிபரப்பப்பட்டுள்ளது.