லக்னோ:

த்மாவத் படம் திரையிடப்பட இருக்கும் மேலும் ஒரு திரையங்கம் ஒன்று சூறையாடப்பட்டது.

பத்மாவத் இந்தித் திரைப்படத்துக்கு குறிப்பிட்ட சில பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன் பீகார் மாநிலம் முஷாபர்பூரில் இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட திரையரங்கை சிலர் கும்பலாக வந்து தாக்கி சேதப்படுத்தினர்.

இந்த நிலையில், பத்மாவத் படம் நாளை திரையிடப்டுவதாக அறிவிக்கப்பட்ட உ.பி. மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கை வன்முறை கும்பல் ஒன்று தாக்கி சேதப்டுத்தியது.

இப்படி தொடர்ந்து பத்மாவத் வெளியாக இருக்கும் திரையரங்குகள் தாக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.