சென்னை: தாது மணல் முறைகேடு தொடர்பாகஇ விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
தாது மணல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் தமிழகத்தில் 12 இடங்களில் சோதனை நடத்தி வந்த நிலையில், விவி மினரல்ஸ் உரிமையாளரும், நியூஸ்7 சேனலின் பங்குதாரருமான வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விதிகளுக்குப் புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான தமிழக அரசின் சிறப்பு குழுவினர் தாது மணல் குவாரிகளில் சோதனை நடத்தி, பெருமளவு முறைகேடு நடந்திருப்பதையும், அரசுக்கு ரூ.5,832.29 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து, தாது மணல் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ஆலை உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஆலை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ, தாதுமணல் தொடர்புடைய நிறுவனங்கள், ஆலை உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த இரு நாட்களாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது, விவி மினரலஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் வீடு, அலுவலகங்கள் உள்பட நெல்லை, தூத்துக்குடி, சென்னை உட்பட 12 இடங்களில் நடந்தது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து, 2000 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் தாது மணல் முறைகேட்டில் ஈடுபட்டதாக 21 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், 6 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டிரான்ஸ் கார்னட் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள், வேல்முருகன், வைகுண்டராஜன், கார்த்தியாயினி, சுப்புராஜன், ரேணுகா , சுமனா, மதனா, ஜெகதீசன் செந்தில்ராஜன், ஊழியர்கள், அடையாளம் தெரியாத நபர்கள் என 21 பேர் மற்றும் விவி மினரல்ஸ் தொடர்புடைய 6 நிறுவனங்கள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களி ல் தாது மணல் எடுப்பதற்காக உரிமம் பெற்ற 7 நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக, அணு சக்திக்கு தேவையான அரிய கனிமம் உள்பட எடுத்து ஏற்றுமதி செய்தன. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த இந்த அரிய கனி மங்களின் கொள்ளை, ‘பிரண்ட் லைன்’ உள்ளிட்ட ஊடகங்களின் விரிவான செய்திகளின் மூலம் அம்பலப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றமும், அரசும் குறிப்பிட்ட நிறுவனங்களின் கிடங்குகளை மூடியதுடன், பல்வேறு விசாரணை குழுக்களும் அமைக்கப்பட்டன.
இந்த வழக்கை விரிவாக விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரியில்ன் தீர்ப்பளித்தது தீர்ப்பில், அரிய தாதுமணல் கொள்ளை நடந்திருப்பதை உறுதி செய்துள்ளதுடன், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சுரங்க நிறுவனங்கள் இடையிலான தொடர்பை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றும் முக்கிய மான தீர்ப்பினை 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கியது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் ஆகியோர், தாது மணல் எடுக்கத் தடை விதிக்கும் முன், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கடற்கரை மணலுக்கான ராயல்டி மற்றும் அபராதமாக மட்டும் ரூ. 5 ஆயிரத்து 832 கோடியே 29 லட்சம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், சீல் வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளிலும், தொழிற்சாலைகளி லும் குவிந்திருக்கும் சுமார் 1.4 கோடி டன் தாது மணல், அரை பதப் படுத்தப்பட்ட மணல் மற்றும் பதப் படுத்தப்பட்ட கனிமங்களின் தற்போதைய அளவு மோனோசைட் உட்பட அனைத்து வகையான BSM களையும் கையாள உரிமை பெற்ற மத்திய அரசின் நிறுவனமான இந்திய அரிய மண் நிறுவனத்திடம் (IREL) உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாது மணல் அள்ள விதித்த தடை செல்லும் – வழக்கு சிபிஐக்கு மாற்றம்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு