சென்னை

தினமும் பாஜக தேசியத் தலைமை தன்னிடம் பேசுவதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளது. இந்நிலையில்,இன்று  முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பேட்டியில் பன்னீர் செல்வம்,

”என்னிடம் கடந்த ஒரு மாத காலமாக பாஜக தேசிய தலைமையிடம் இருந்து தினமும் பேசி வருகிறார்கள். நீங்களே அதாவது செய்தியாளர்களே பாஜக – அதிமுக கூட்டணி முறிவு நாடகம் என்று கூறுகிறீர்கள்.

தொடர்ந்து பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது யார் என்று உங்களுக்குத் தெரியும். ஏற்கனவே பிரதமருக்கு அருகில் இருந்து விட்டு தற்போது உறவு இல்லை என சொல்வது யார்?

எடப்பாடிக்கு பாஜக தேசிய தலைமையிடம் மாநிலத் தலைமையிடம் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க என்ன தகுதி உள்ளது. மூன்றாவது முறையும் இந்நாட்டை ஆளும் தகுதியை பாஜக பெற்றுள்ளது”

என்று கூறி உள்ளார்.