சென்னை:
மாயமான், மண் குதிரை ஒன்று சேர்ந்துள்ளதாக ஓ.பி.எஸ்., டி.டி.வி. இணைந்தது குறித்து பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த எட்டாம் தேதி ஓ.பன்னீர் செல்வம் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை நேரில் சென்று ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும் ஒன்றாக செயல்பட்டு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம் என்று டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் கூட்டாக அறிவித்தனர்.

இந்நிலையில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. இணைந்தது குறித்து பழனிசாமி, மாயமான், மண் குதிரை ஒன்று சேர்ந்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன்கூடாரம் ஏற்கனவே காலியாகி விட்டது. காலியான கூடாரத்தில் ஓட்டகம் புகுந்தது போல் ஓ.பன்னீர் செல்வம் புகுந்துள்ளார் என்று கூறினார்.

மேலும், பண்ருட்டி ராமச்சந்திரன் பற்றி எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்தார்.