சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்த நிலையில், அவர் விசாரிக்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது சர்ச்சையான நிலையில், ஓபிஎஸ் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையில் இருந்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார். இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது,