டெல்லி: மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளகாத்தில், எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாதைகளுடன் பேரணி நடத்தினர். இந்தப பேரணியில்  காங்கிரஸ், திமுக உள்பட ஏராளமான எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்த்தின் பெயரை விக்சித் பாரத் ஜீ ராம் ஜீ என பெயர் மாற்றம் செய்துள்ள மத்தியஅரசு, 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளதுடன், இதற்கான கூலியில், 40 சதவிகிதம் மாநில அரசு வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக வளர்ந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இது மாநிலங்களுக்கு மேலும் வரிச்சுமையை அதிகரிக்கும் என்றும், காந்திபெயர் மாற்றக்கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால், மத்தியஅரசு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் oசம்பர் 16ந்தேதிஅன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணி நடத்தினர்.

விக்சித் பாரத் ஜீ ராம் ஜீ மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். இந்த பேரணியில் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்.

[youtube-feed feed=1]