டில்லி

பிரதமர் மோடியைத் தோற்கடிக்க வல்ல ஒரே ஆயுதம் இந்தியப் பொருளாதாரம் என ஆங்கில ஊடகம் தி ப்ரிண்ட் தெரிவ்த்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.   அதற்காக இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   ஆயினும் தற்போது இந்தியப்  பொருளாதாரம் சரிவடைந்துள்ளதைப் பிரதமர் மோடியோ அல்லது மத்திய அமைச்சர்களோ ஒப்புக் கொள்ளாமல் இருக்கின்றனர்.   இது நாட்டு மக்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.   இந்தியப் பொருளாதார நிலை குறித்து ஆங்கில செய்தி ஊடகமான தி பிரிண்ட் ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அந்தக் கட்டுரையில், “ஆட்சியாளர்களைப் பற்றிய கருத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலை பல குடியரசு நாடுகளில் இருந்துள்ளன.  அதற்கு உதாரணமாக சோவியத் யூனியனை கூறலாம்.   சோவியத் நிலை குறித்து மக்கள் மாஸ்கோ நகரத் தெருக்களிலும், கடைகளிலும் கூடும் போது ரகசியமாக மட்டுமே பேசி வந்தனர்.  சோவியத் யூனியன் தற்போது உடைந்து பல பகுதிகள் ஆகி உள்ளன.

அன்று ரகசியப்பேச்சாக இருந்தது தற்போது வாட்ஸ் அப் பகிர்வாக உள்ளது.  தற்போதைய பொருளாதார சரிவில் நிதி அமைச்சரின் நேற்றைய அறிவிப்பால் பங்குகள்  மதிப்பு உயர்னதுள்ள்து சற்றே நிம்மதியை அளித்துள்ளது.   ஆனால் இந்த ஒரு நடவடிக்கையால் மட்டும் இந்தியப் பொருளாதாரம் சரிவில் இருந்து மீளுமா என்பது ஒரு பெஇர்ய கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு அரசர் செல்லமாக ஒரு யானையை வளர்த்து வந்தார்.  அந்த யானை திடீர் என  நோய்வாய்ப்பட்டது.   யானை இறக்கும் தறுவாயை அடைந்ததால் அரசர் மிகவும் சோகம் அடைந்தார்.   அந்த யானையின் மரணச் செய்தியை தனக்கு முதலில் தெரிவிப்போரின் தலை துண்டிக்கப்படும் என அரசர் அறிவித்தார்.   அந்த யானை மரணம் அடைந்தது.

ஆனால் அதை அரசரிடம் தெரிவிக்க யாருக்கும் தைரியம் வரவில்லை.  ஆயினும் அந்த யானைப்பாகனுக்கு இந்த செய்தியை அரசருக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை இருந்தது.  எனவே அவர் அரசரிடம் சென்று யானை சாப்பிடவில்லை, எழுந்திருக்கவில்லை, மூச்சு விடவில்லை எனத் தெரிவித்தார்.  அரசர் பாகனிடம்,”யானை இறந்து விட்டதா?” என கேட்டார்.  ” அதை யானையைப் பார்த்து விட்டு நீங்கள் தான் தெரிவிக்கவேண்டும்” எனப் பாகன் கூறினார்

இந்தக் கதையில் வரும் யானை நமது இந்தியப் பொருளாதாரம் ஆகும்.   அந்த  யானை இறந்ததை நேரடியாகச் சொல்லாத பாகனைப் போல் நமது அமைச்சர்களும் ஏதேதோ சொல்லி வ்ருகின்ரனர்.   ஆனால் யாருக்கும் யானை இறந்து விட்டதைத் தெரிவிக்கத் தைரியம் இல்லை.  அதே நேரத்தில் நமது பொருளாதாரம் முழுமையாக மரணம் அடையவில்லை என்பதையும் நாம் இப்போது கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது பாகனின் நிலையில் இந்திய வர்த்தக சந்தை உள்ளது.   கடந்த ஜூன் முதல் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.   பணவீக்கம் அதிகரிக்காதது ஒன்றே தற்போதைய ஒரே நற்செய்தியாகும்.  இந்தியப் பொருளாதாரம் குறித்த உண்மைகள் மக்களுக்கு மூன்று வழிகளில் தெரிய வருகிறது.

இதில் முதலாவதாக மோடி எதிர்ப்பாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் பலர்  வதந்திச் செய்திகளைப் பரப்புவதால் ஓரளவுக்கு மேல் நம்ப முடியாத நிலை உள்ளது.   அடுத்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளது.  இந்த சந்திப்புகளில் அவர் அளிக்கும் அறிவிப்புக்களின் மூலம் பொருளாதார சீர்கேட்டை அரசு அறிந்துள்ளது என்பது மக்களுக்கு  தெரிய வந்துள்ளது.

அதிலும் நேற்று நிதியமைச்சரின் அறிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.   அவர் அறிவித்த வரிச்சலுகை மற்றும் வரிக்குறைப்பினால் முதலீடுகள் அதிகரிக்கும் என அவரே  தெரிவித்துள்ளார்.    ஆனால் அரசு தனது செலவுகளைக் குறைப்பது உள்ளிட்ட எவ்வித சிக்கன நடவடிக்கையையும் இது வரை எடுக்காமல் உள்ளது.   மேலும் இந்த வருமான இழப்பை ஈடு கட்ட பொதுமக்கள் மீது மறைமுக வரி விதிப்பு உண்டாகும் என்னும் அச்சமும் உள்ளது.

மூன்றாவது மற்றும் முக்கியமான ஒன்று மோடியின் அறிவிப்புக்கள் ஆகும்.  கடந்த 70 வருடங்களாகப் பலரும் கூறி வந்த முத்தலாக் தடை, விதி எண் 370 நீக்கம்  ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.  வரும் நவம்பரில் அயோத்தி ராமர் கோவில் இந்த அறிவிப்புக்களில் இடம் பெற வாய்ப்புண்டு.   ஆனால் இவற்றை எல்லாம் விடப் பிரதமர் மோடி கவனிக்க வேண்டிய முக்கியமானதாகப் பொருளாதார சீர்திருத்தம் ஆகும்.

மோடியின் இந்த சாதனைகள் அனைத்தும் பொருளாதார சரிவினால் மக்கள் மத்தியில் எடுபடாமல் போக வாய்ப்பு உள்ளது.   இந்தியப் பொருளாதாரம் சீரடைய தேவையான நடவடிக்கைகளை மோடி உடனடியாக எடுக்க வேண்டிய நிலையில் நாடு உள்ளது.   ஒரு வேளை மோடி தோற்க நேர்ந்தால் அதற்கு இந்தியப் பொருளாதாரமே காரணமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.