செனனை: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில், ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 9ம் தேதி முதல்  வகுப்புகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால்,  பள்ளி, கல்லூரிகளை திறக்க வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆகஸ்டு 18ந்தேதி முதல் பொறியியல் மாணாக்கர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றப்படும் என்றார். தமிழகத்தில்,  கொரோனா தொற்று பரவலை பொறுத்து கல்லூரிகளை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறியவர்,   பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல், முதலாமாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  தனியார் கல்லுரிகளில் 75% மட்டுமே கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர்,  143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சம் இடங்களில் சேர, இதுவரை  1.26 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், விண்ணப்பங்கள், அந்தந்த கல்லூரிகளுக்கு பிரித்து அனுப்பி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறினார்.