Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஆன்லைன் வகுப்புகள் வழிமுறைகள்… உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Jul 20, 2020
சென்னை:
ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை மத்தியஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது பல தனியார் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கி உள்ளது.  அரசு பள்ளிகள் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த  முடிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகள்  தொடரப்பட்டது.  விசாரணையின்போது,   கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் மத்தியஅரசும் பதில் அளிக்க உத்தர விட்டது.
வழக்கின் இன்றைய விசாரணையின்போது மத்தியஅரசு சார்பில் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.
1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும் 
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம்
மேலும், தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய வதிமுறைகளை மாநில அரசுகள் வகுத்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன் தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்களை கவனிப்பதால் மாணவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற நோய் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து ஜூலை 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Post navigation

சென்னையில் சாலையோர வியாபாரி உள்பட அனைத்து வணிகர்களுக்கும் கொரோனா சோதனை…
கொலராடோவில் பியூபோனிக் பிளேக் நோய் உறுதியாகியுள்ள ஒரு அணில்

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer