திருவனந்தபுரம்: பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16ந்தேதி தொடங்கும் மண்டல பூஜைக்கான இணையதள ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர பூஜைகள் மிகவும் விசேஷமானவை. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று அய்யப்பனை தரிசித்து, ஆசி பெற்று வருகின்றனர். இதையட்டி,  மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை சபரிமலை அய்யப்பன் கோவில்  நடை திறக்கப்படு கிறது. நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து  டிசம்பர் 27ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி உண்டு. அன்றைய தினத்தோடு  மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும்.

பின்னர் மீண்டும், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி ம  நடை திறக்கப்பட்டு 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.

இதையொட்டி பக்தர்கள் ஆன்லைன்மூலம் பதிவு செய்ய, இன்று  சபரிமலையின் http://www.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு தொடங்கி உள்ளது.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் வரும் வாகனங்கள் நிலக்கல் வரையே அனுமதிக்கப்படும். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படும்.