குஜராத் மாநிலம் பந்த்ரா – பகத் இடையே ஓடும் பயணிகள் ரயிலில் பராமரிப்பு ஊழியராக இருப்பவர், ஷேக்.

அங்குள்ள ரயில் பெட்டி ஒன்றின் கழிப்பறையில் ரகசிய காமிராவை பொருத்தி ரகசியமாக ‘படம்’ பிடித்து வந்துள்ளார்.

கழிப்பறையில் குப்பைகளை கொட்டும் கூடையில் இந்த காமிராவை பொருத்தி இருந்தார்.

அந்த ரயிலில் பயணம் செய்த இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர், கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு காமிரா இருப்பதை கண்டு பிடித்துள்ளார்.

இது குறித்து அவர் ரயில்வே போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில் ஊழியர் ஷேக், காமிரா பொருத்தி இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த ஆசாமி, ஆபாச படம் பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ரயில் பெண் பயணிகளை படம் பிடிக்க,இந்த காமிராவை வைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

– பா. பாரதி