நாடு முழுவதும் பறிமுதல் செய்யும் பணத்தில் 5ல் ஒரு பங்கு  தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் கடந்த 11-ம் தேதி முதல் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் மட்டும்  ரூ.38.25 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இது நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதில், 5ந்தில் ஒரு பங்கும் என்றும் கூறி உள்ளது

சென்னையில் ரூ.1.33 கோடியும், காஞ்சிபுரத்தில் ரூ.3.15 கோடியும், திருவள்ளூரில் ரூ.1.04 கோடியும், தஞ்சாவூரில் ரூ.1.78 கோடியும், மதுரையில் ரூ.1.44 கோடியும் பறிமுதல் ஆகியுள்ளன.

மதுரையில் ரூ.4.59 கோடியும், சேலத்தில் ரூ.2.16 கோடியும், நீலகிரியில் ரூ.1.21 கோடியும், சென்னையில் ரூ.1.25 கோடியும் ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 209 கிலோ தங்கம், 318 கிலோ வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த தகவல்கள் கடந்த திங்கட்கிழமை வரை பறிமுதல் செய்யப்பட்டது என்றும் தமிழக  தேர்தல் ஆணையர்  சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் தேர்தலையொட்டி பறக்கும்படை நடத்திய சோதனையில் இதுவரை ரூ. 539.99 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் கடந்த 25-ஆம் தேதி வரை ரூ. 143.47 கோடி, ரூ.89.64 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ. 131.75 கோடி மதிப்பிலான போதைப்பொருள், ரூ. 162.93 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 107.24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து உள்ளது.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து உ.பி. மாநிலம் 2வது இடத்தில் உள்ளது. இங்கு 104.53 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து ஆந்திராவில் 103.4 கோடி ரூபாயும், பஞ்சாபில் 92.8 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. ஜார்கண்ட், மிசோரம் மாநிலங்களில் ரூ.1 கோடி அளவில் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.