மதுரை:

பசுர குடிநீரை கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? என்று  மதுரை உயர்நீதி மன்றம் தமிழக அரசு கேள்வி எழுப்பி உள்ளது.

கொரோனாவுக்கு சித்தாவில் மருந்து உள்ளது; அதை சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும் என மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  சித்த மருத்துவப் பொடியை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின்  கடந்த விசாரணையின்போது,  மனு மீது பதில் அளிக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கேள்விக்கு ஏன் இன்னும் பதில் அளிக்கவில்லை என்று கேட்ட நீதிபதிகள்,  கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயத்தை  போன்றவற்றை  எந்த சோதனையின் அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்குகிறீர்கள்?  என்றும் வினவினர்.

கொரோனா தொற்றுக்கு எந்த அடிப்படையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் பரிந்துரைக்கப்படு கிறது?
சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது?
அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்தை இதுவரை ஆய்வு செய்யாதது ஏன்?
கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயத்தை, எந்த பரிசோதனையின் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? 
ஒருபுறம் சித்த மருந்தை வாங்கிக் கொ ண்டு, மறுபுறம் அதில் கண்டுபிடிக்கும் மருந்தை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன்?
இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், ஆங்கில மருத்துவர்களின் வியாபார உத்தி, லாப நோக்கால் இயற்கை மருத்துவம் அழிந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.