ந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் நினைவு தினம் இன்று.

கே.ஆர். நாராயணன் 1920ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி கேரள மாநிலம், திருவாங்கூரிலுள்ள பெருந்தனம் என்ற ஊரில் பிறந்தார். குறிச்சிதனம் என்ற சிற்றூரில், தொடக்கக் கல்வி  உழவூரில் நடுநிலைக் கல்வியையும் பயின்ற கே.ஆர். நாராயணன், உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். மிகவும் ஏழைக் கூத்தாட்டுக் குளம் மற்றும் குரவிளங்காடு ஆகிய இடங்களில் மேல்நிலைக் கல்வியை முடித்தார்.

தொடக்கக் கல்வி பயிலும் போது, குடும்பத்தின் ஏழ்மை காரணமாக வயல்வெளிகளைக் கடந்து, 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று படித்தார். கோட்டயத்தில் கல்லூரிக் கல்வியையும், கேரள பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.

இதழியல் படிப்பை முடித்திருந்த கே.ஆர். நாராயணன்,  பிரபல ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், எனினும் வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்ற தீராத ஆர்வத்துடன் அவர் இருந்தார். பத்திரிகையாளராக இருந்தபோது, 1945-ம் ஆண்டில், மகாத்மா காந்தியை பேட்டி கண்டுள்ளார்.

பின்னர் டாடா குழும கல்வி உதவித் தொகையைப் பெற்று, லண்டன் பொருளாதாரக் கல்விக் கழகத்தில் (London School of Econmics) அரசியல் அறிவியலில் மேல் படிப்பை  முடித்தார்.

கடின உழைப்பும், திறமையும் இருந்தால், எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும்  என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கே.ஆர். நாராயணன்.

இவர் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு ஆட்சிப் பணியில் (ifs) சேர்ந்து ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராக பணியாற்றினார்.

பின்பு 1984ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த இவர், ஒட்டப்பாலம் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில், மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார்.

1992ஆம் ஆண்டு இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பிறகு 1997ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் 2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். நாட்டின் 10வது பிரதமராக பதவி வகித்தார்.

தடைகள் பல தாண்டி, உயர் கல்வியை பயின்ற கே.ஆர். நாராயணன், சமூக முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டதால், நாட்டின் முதல் குடிமகனாக உயர முடிந்தது. ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் (United Front coalition) குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசு தலைவராக பதவி வகித்த கே.ஆர்.நாராயணன், இந்தியாவின் முதல் தலித் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரியவர்.

கடின உழைப்பும், திறமையும் இருந்தால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த கே.ஆர்.நாராயணன் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி மறைந்தார்.