பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பழமையான கிறிஸ்த்தவ தேவலாயமான Notre Dame சர்ச்சில் நேற்று இரவு தீப்பிடித்தது. பயங்கரமான தீ விபத்து ஏற்பட்ட போதிலும், தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தை முழுவதுமாக அழியவிடாமல் ஓரளவு காப்பாற்றிவிட்டனர்.

உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் இந்த சம்பவம் குறித்து தங்களது வருத்தத்தை தெரிவித்திருக்கும் நிலையில், நடிகை தமன்னா, இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

“உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு அமைதிக்கான இடமாக திகழ்ந்த Notre Dame தீயில் எரிந்தது சோகமாக உள்ளது.” என்று அதில் தெரிவித்துள்ளார்.