ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு எழை மகளிர் வாழ்வாதரம் காக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. செப்டம்பர் 15ந்தேதி தொடங்கப்படும் இந்த திட்டத்துக்கு பயனர்களை தேர்வு செய்யும் வகையில்,  விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ரேசன் கடை ஊழியர்களும் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற தகுதி பெற்ற குடும்பங்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வரும் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் ஆக.5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.

ரேஷன் கடை பணியாளர்கள் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் உள்ள முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

பொதுமக்கள் விண்ணப்பங்கள் பெற ரேஷன் கடைக்கு செல்ல தேவையில்லை. ரேஷன் அட்டை இருக்கும் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்று கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவி அதனை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை. மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய்துறையில் வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெற தேவையில்லை.

விண்ணப்ப பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி மதல் 5.30 மணி வரையும் நடைபெறும்.

முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும். விண்ணப்ப பதிவு முகாமிற்கு வரும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரி பார்க்கப்படும்.

பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்ததால் அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும். குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற தகுதி பெற்ற குடும்பங்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது 2022 செப்.15 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்.

குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர். குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார். மனைவியின் பெயர் இல்லாத பட்சத்தில் குடும்பத்தில் உள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்ப தலைவியாக கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கிழ் பயன்பெற ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்க செய்யலாம்.

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்ப பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை சரி பார்ப்புக்கு எடுத்து வர வேண்டும்.
இதுகுறித்து சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 0423-2450034, 2450035 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நீலகிரி மாவட்டத்தில் முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக வரும் 26ம் தேதி துவங்கி ஆக.4ம் தேதி வரை நடக்கும் முதற்கட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊட்டி வட்டம் – ஆடாசோலை, முத்தொரை, அம்மனட்டி, நஞ்சநாடு, கல்லக்கொரை, பைகமந்து, வெல்பெக் அண்ணாநகர், எம்.பாலாடா, அப்புகோடு, கப்பத்தொரை, எல்லக்கண்டி, சின்கோனா, குழிச்சோலை, இந்துநகர் எச்பிஎப், கெங்கமுடி, எப்பநாடு, இடுஹட்டி, மொரக்குட்டி, அகலார், குருத்துகுளி, கவர்னர்ேசாலை, பார்சன்ஸ்வேலி, மேல்கவ்வட்டி, கீழ்கவ்வட்டி. குன்னூர் வட்டம் – கரன்சி, கோடமலை, பர்லியார், கம்பிசோலை, பேரட்டி, பாரத்நகர், அம்பிகாபுரம், கரிமரஹட்டி, கார்டைட் கூட்டுறவு பேக்டரி, சிங்காரா எஸ்டேட், நீலகிரி கூட்டுறவு நிறுவனம் ஆடர்லி எஸ்டேட். கோத்தகிரி வட்டம் – பர்ன்சைடு, கொணவக்கரை, ஆடுபெட்டு, கொட்டக்கொம்பை, பெத்தளா, குஞ்சப்பணை, கோழிக்கரை, வார்விக் எஸ்டேட், ஆவுக்கல், கூட்டாடா எஸ்டேட், குண்டாடா, செம்மனாரை, கெங்கரை, மகளிர் ஹிட்டக்கல், பையங்கி.

குந்தா வட்டம் – பேலிதளா, எமரால்டு கடை – 2, தேவர்சோலை, கன்னேரிமந்தனை, கீளூர், நுந்தளாமட்டம், மீக்கேரி, பாலகொலா, துளிதலை, பி.மணியட்டி, நுந்தளா, பெம்பட்டி, புதுஹட்டி, இத்தலார், தங்காடு, டி.ஒரநள்ளி. பந்தலூர் வட்டம் – சேரம்பாடி, எருமாடு, கொளப்பள்ளி-1, கொளப்பள்ளி-2, சேரங்கோடு செக்போஸ்ட், வென்ட்ெவார்த், கொளப்பள்ளி (மகளிர்), சேரங்கோடு, சேரம்பாடி பஜார், சேரம்பாடி சுங்கம், கச்சிச்சால், எருமாடு, கையுன்னி, அய்யன்கொல்லி, குறிஞ்சிநகர், பஞ்சக்கொல்லி, வெட்டுவாடி, கொளப்பள்ளி (பிஏசிபி), போத்துகொல்லி, பனஞ்சரா ஆகிய கிராம ரேஷன் கடை பகுதிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

ஊட்டி நகராட்சி ஹாஸ்பிட்டல் ரோடு, காந்தல் பஜார், காமதேனு மிஷினரிஹில், நியு மார்க்கெட், பாம்பேகேசில், அப்பர் பஜார், கார்டன் சாலை, கீரின்பீல்டு, ஆர்கே., புரம், மேரிஸ்ஹில், சூப்பர் மார்க்கெட் 1 மற்றும் 2, நொண்டிமேடு, மார்கெட் போஸ்ட் 1,2, முள்ளிக்கொரை, மெயின் பஜார் – 1 காந்தல் 1,2, பிங்கர்போஸ்ட் 1,2, கோடப்பமந்து, பர்ன்ஹில், லவ்டேல் -1, மஞ்சனக்கொரை, ஹெட் போஸ்ட் ஆபிஸ் கேம்பஸ், ரோஸ்மவுண்ட்.

தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டுறவு பண்டக சாலை – 1,2,3, புதுமந்து, தலையாட்டிமந்து, பட்பயர், காந்தல், குன்னூர் நகராட்சி – அப்பர் குன்னூர், உமரி காட்டேஜ், டென்ட்ஹில், காந்திபுரம், கேஷ்பஜார், மினி சூப்பர் மார்க்கெட், வண்டிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அப்பர் குன்னூர் ஓல்டு, அப்பர் குன்னூர் நியூ, சந்திரா காலனி, ஓட்டுபட்டறை, வசம்பள்ளம், ரெயில்வே கூட்டுறவு பண்டக சாலை, ஆர்வார்பேட்டை, வேல் மகளிர் சுய உதவிக்குழு கிருஷ்ணாபுரம்.

கூடலூர் நகராட்சி – துப்புக்குட்டி பேட்டை, சுங்கம் (மகளிர்), செவிடிபேட்டை, அப்பர் கூடலூர், அத்திபாலி, அல்லூர், தொரப்பள்ளி, 1வது மைல், நடு கூடலூர், 2வது மைல், ராஜகோபாலாபுரம் -1,2, வண்டிபேட்டை, மார்த்தோமா நகர், நந்தட்டி, சளிவயல், கோழிப்பாலம், காசிம்வயல், புத்தூர்வயல், செம்பாலா. நெல்லியாளம் நகராட்சி – பந்தலூர், கூவமூலா ஆகிய ரேசன் கடை பகுதிகளில் நடைபெறும்.

குன்னூர் வட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி பகுதிகள் – சிங்காரா தோப்பு, பெல்லட்டிமட்டம், வண்டிசோலை, வெலிங்டன், ஜெயந்திநகர், கோபாலபுரம் – 1,2, சட்டன் எஸ்டேட், காட்டேரி டேம், பிக்கோல், அதிகரட்டி, முட்டிநாடு, கொல்லிமலை, கோடேரி, கூர்காகேம்ப் மகளிர் சுயஉதவிக்குழு. கோத்தகிரி வட்ட பேரூராட்சி பகுதிகள் – டானிங்டன், அம்பேத்கர் நகர், கட்டபெட்டு-1,2, பெட்டட்டி, தலைமையகம், லோயர் பஜார், அப்பர் கோத்தகிரி, கன்னேரிமுக்கு, திம்பட்டி, கிருஷ்ணாபுதூர், வெஸ்ட்புரூக், மார்க்கெட், கேர்பெட்டா எஸ்டேட், நெக்கிகம்பை, அன்னை மகளிர். அதிகரட்டி பேரூராட்சி – தாம்பட்டி.

கூடலூர் வட்ட பேரூராட்சி பகுதிகள் – தேவர்சோலை-1,2, தேவன், நம்பர் 3 டிவிஷன், மேபீல்டு எஸ்டேட், செருமுள்ளி, புளியம்பாறை ஆகிய ரேஷன் கடை பகுதிகளில் முதற்கட்ட விண்ணப்ப பதிவு நடைபெறும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.