சென்னை:
மிழ்நாட்டுக்கு கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே வழங்கியுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்திடம் அளித்த பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே வழங்கியுள்ளது என்றும், இதனால் முதல்வர் ஸ்டாலின் உத்தாவின் பேரில் மத்திய அமைச்சரை சந்தித்து கடிதத்தை அளித்தேன். இன்னும் 2 அல்லது மூன்று நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று
அவர் தெரிவித்து உள்ளார் என்று அமைச்சர் துரை முருகன் கூறினார்.