சென்னை,

காங்கிரஸ் மூத்த தலைவரும முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து  கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

டிடிவி  ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து அறிவித்ததற்கு கடுமையாக கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்திருப்பது, முற்றிலும் மைனாரிட்டி தமிழக  அரசைக் காப்பாற்றுவதற்காகத்தான். மூழ்கும் கப்பலை யாராலும் காப்பாற்றவே முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.