சென்னை:
மிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்றும் 6-9ஆம் வகுப்புகளுக்குமே 5 முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ம் தேதி எனவும், 2022-23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.