டெல்லி:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று  இந்திய மருத்துவ கவுன்சில்ஏற்கனவே பரிந்துரை செய்துள்ள நிலையில், அதற்கு போதிய சான்று இல்லை என்று ஐசிஎம்ஆர் கூறி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்பட்டுவந்த கொய்னா மாத்திரை கள் சிறந்த தடுப்பு மருந்து என்று பிரான்ஸ் ஆய்வுகள் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதைத்தொர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று  இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்துதிருந்தது. ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைக்கு, போதிய சான்றிதழ் இல்லை என்ற ஐசிஎம் மறுப்பு தெரிவித்து உள்ளது.