பாட்னா

லாலு பிரசாத் யாதவை பாஜக அரசு வழிகாட்டுதலால் சிபிஐ மிரட்டுவதாக நிதிஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார் தலைநகர் பாட்னாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரிடம் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நிதிஷ் குமார்,

“லாலு பிரசாத் யாதவ் மத்திய பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலால் சிபிஐயால் துன்புறுத்தப்படுகிறார். பா.ஜ.க. அரசு, எதிர்க்கட்சி தலைவர்களைத் துன்புறுத்துவதற்காக மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்பது உண்மைதான்”

எனப் பதில் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு “அப்படி எதுவும் இல்லை. மாநிலத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த நாங்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறோம்” என்று நிதிஷ் குமார் பதிலளித்தார்.