பாட்னா

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேலவை தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

கடந்த 2005 முதல் தற்போது வரை பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தேர்தலில் போட்டியிடாமல், மேலவை உறுப்பினராகவே தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அவ்வகையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தற்போது அந்த மாநில மேல்-சபை உறுப்பினராக இருந்து வருகிறார்.

அவரது மேலவை உறுப்பினர் பதவிக் காலம் முடிவடைவதால் மீண்டும் போட்டியிடுகிறார்.வரும் 21 ஆம் தேதி  இதற்கான தேர்தல் நடைபெறுகிறது.  நேற்று முதல்வர் நிதிஷ்குமார் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அவருடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்களான சாம்ராட் சவுத்ரி, பாஜகவைச் சேர்ந்த விஜய் குமார் சின்ஹா, ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் இருந்தனர். மேலும் அமைச்சர் சந்தோஷ் சுமன் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த காலித் அன்வர் ஆகியோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.