பாட்னா: பீகார் முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். நிதிஷ்குமார் 8வது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த நிதிஷ்குமார், 2வது முறையாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவ தாக நேற்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து , நேற்று மாலை கவர்னரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

பின்ன்ர, அங்கு அமைந்துள்ள ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியான மகாபந்தன் கூட்டணியில் இணைந்தார்.  தொடர்ந்து, மகா கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிதீஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்தன. கூட்டணியின் தலைவராகவும் நிதீஷ் குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பின்ன்ர, கூட்டணி தலைவர்களுடன் வந்து கவர்னரை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதையடுத்து இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது.  பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, முதல்வராக நிதீஷ் குமாருக்கும், துணை முதல்வராக தேஜஸ்விக்கும் ஆளுநர் ஃபாகு சௌஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

நிதிஷ்குமாருக்கு, தற்போது 164 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள், தங்களது ஆதரவு குறித்து கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளன.

அமைச்சரவை பதவி ஏற்பது குறித்து, கூட்டணி கட்சிகளின் விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.