பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜகவுடன் உறவில் இருந்த நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, மகாபந்தன் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. நிதிஷ்குமாரின் இந்த அதிரடி பாஜக தலைமைக்கும், மோடி, அமித்ஷாவுக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. இதன் காரணமாக, இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.