மொகாலி: கொரோனா பரவல் அதிகரிப்பால், பஞ்சாப் மாநிலத்தின் சில  பகுதிகளில் இன்று முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த பொதுமுடக்கம் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டது.

ஆனால், கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து தொடங்கி உள்ளது.

இந் நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி மற்றும் பதேஹ்கர் சாஹிப் ஆகிய பகுதிகளில் இன்று முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பாட்டியாலா பகுதியில் இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.