டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட வினய் சர்மா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

டெல்லியில் 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.  அந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

வரும் 1ம் தேதி தண்டனையை நிறைவேற்றப்படுகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தண்டனையை ரத்து செய்ய கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கருணை மனு அனுப்பியுள்ளார்.

இந்த தகவலை அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் அனுப்பிய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.