டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் காஷ்மீர் பகுதிகளின் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஒய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளும் அடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் பயங்கரவாதத்தை முழுமையாக ஒடுக்கும் வகையில், என்ஐஏ அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள், அவர்களுக்கு நிதி உதவி வழங்குபவர்கள் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அவ்வப்போது சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு சொந்த வீடு, அலவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று  காஷ்மீர், டெல்லியில் 17 இடங்களில்  தேசிய புலனாய்வு முகமை  சோதனை நடத்தி வருகிறது.   காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், குல்காம், பெக்ரம் போரா, சோபரே, அவந்தி போரா, ஜம்மு  மற்றும் டெல்லியில் தலா ஒரு இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

அனந்த்நாக்கில் உள்ள ஹதிகம் கிராமத்தில், மறைந்த ரஷீத் அகமது ஷேக்கின் மகன் ஜாவித் அகமது ஷேக், அஹத் ஷேக்கின் மகன் இக்பால் ஷேக் (அரசு ஆசிரியர்), முகமது ஷேக்கின் மகன் ஷோகத் ஷேக் (கிரியானா கடைக்காரர் (மஞ்சூரி ஷேக்), மன்சூரி ஷேக் ஆகியோரின் கூட்டு வீட்டில் சோதனை நடத்தினர்.

குல்காமில் உள்ள மிர்ஹாமா கிராமத்தில், வார்டு-4 இன் பஞ்ச் அலி முகமது பேடரின் மகன் பஷீர் அகமது பேடரின் வீடுகளை என்ஐஏ சோதனை செய்தது.

புல்வாமாவில், அவந்திபோராவில் உள்ள நம்பர்தார் சார்சூவின் வீட்டில் NIA சோதனை நடத்தியது மற்றும் நம்பர்தார் அப்துல் கனி வானி மற்றும் அவரது மகன் முகமது இம்ரான் வானி ஆகியோரை காவலில் வைத்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது.

புல்வாமாவில் உள்ள ராஜ்போரா கிராமத்தில் உள்ள டிராப்காம் பகுதியில், ஓய்வுபெற்ற ஏஎஸ்ஐ முகமது அஹ்சன் மிரின் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.

அனந்த் நாக்கில் உள்ள ஹதிகம் கிராமத்தில் அரசு ஆசிரியர் இக்பால் ஷேக் மற்றும் டெய்லர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. புல்வாமாவில் உள்ள ராஜ்போரா கிராமத்தில் ஓய்வு பெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் அஹ்சன் மிரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.