கோவை

மிழகம் முழுவதும் 30 இடங்களில் என் ஐ ஏ கோவை  கார் வெடிப்பு குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கோவை மாவட்டம் உக்கடத்தின் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காரை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். கோவையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பானது..

காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி அவருடைய வீட்டில் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டு இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது  இந்த. விசாரணையில் வழக்கு தொடர்பாக முகமது தவ்பிக், குன்னூரைச் சேர்ந்த உமர்பாருக், பெரோஸ்கான், ஷேக் இதயத்துல்லா, சனாபர் அலி ஆகியோரை கைது செய்தனர்..

இன்று அதிகாலை முதல் கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாகத் தமிழகத்தில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை சென்னையில் திருவிக நகர் முஜ்பீர் ரகுமான் என்பவர் வீட்டிலும், நீலாங்கரை, கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜிஎம் நகர் உள்படத் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் பயங்கரவாத செயலுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.  மேலும் கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.