சென்னை:  சிவகங்கை மாவட்டம்,  இளையான்குடியில் தலைமறைவாக உள்ள  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து, அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா எனப்படும் இஸ்லாமிய அமைப்பானது நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, அந்த இயக்கத்தை தடை செய்ய கோரிக்கைகள் வலுத்த வருகின்றன. சமீபத்தில், கவர்னர் ஆர்.என்.ரவியுடம், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா  மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும்,  இந்த அமைப்பு மனித உரிமைகள் அமைப்புகள் போல, செயல்பட்டு, ஆஃப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு சண்டையிட ஆட்களை அனுப்பி வைப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இநத் நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி   சிவகங்கை மாவட்டம்  இளையான்குடி கலிபா தெருவைச் சேர்ந்தவர் முகமது ரோஸ்லான் (45). வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர். .இவரது வீட்டுக்கு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் விகாஸ்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று வந்தனர்.

அப்போது கடந்த 4 மாதங்களாக முகமது ரோஸ்லான் வீட்டுக்கு வரவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தி சில ஆவணங்களை வாங்கிச் சென்றனர்.

அப்போது சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெளியேற வேண்டுமென கோஷமிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அப்பபகுதி கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தேவையின்றி கூட்டம் கூடியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது இளையான்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.