டில்லி

டுத்த வாரம் பிரதமர் மோடி ஆசியான் இந்தியா மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா செல்கிறார்.

அடுத்த வாரம் பிரதமர் மோடி இந்தோனேசியா செல்கிறார். 6, 7-ந் தேதிகளில் அவர் அங்குத் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான்  இந்தியா மாநாட்டில் பங்கேற்கிறார்.இந்த மாநாடு இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

அங்கு நடக்கும் கிழக்காசிய மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார். மோடி இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு செல்கிறார்.

பிரதமர் மோடி தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில், அந்த நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக, பாதுகாப்பு உறவை மேம்படுத்துவது, மையப்பொருளாக இருக்கும்.

இந்த தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.