புதுடில்லி:
ஜூலை 17, 18ல் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்று மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பெங்களூருவில் வரும் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் 2வது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூலை 17, 18ல் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.