நியூஸிலாந்து நாட்டின் புதிய பிரதமராக நியூஸிலாந்து தேசிய கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லக்ஸன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் லக்ஸன்

இதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லேபர் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

2017 ம் ஆண்டு அமோக வெற்றி பெற்ற லேபர் கட்சியின் தலைவர் ஜெஸிந்தா ஆர்டர்ன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெஸிந்தா ஆர்டர்ன்

கொரோனா கட்டுப்பாடுகள், பொருளாதார மந்தநிலை காரணமாக நியூஸிலாந்து மக்களின் நம்பிக்கையை இழந்த ஜெஸிந்தா ஆர்டர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததோடு அக்டோபர் 14 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறியிருந்தார்.

ஜெஸிந்தா-வைத் தொடர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் கடந்த 9 மாதங்களாக பிரதமராக பொறுப்பு வகித்தார்.

கிறிஸ் ஹிப்கின்ஸ்

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் தொழிலதிபரான கிறிஸ்டோபர் லக்ஸன் அமோக வெற்றி பெற்றுள்ளார். நியூஸிலாந்து மக்களின் முடிவை ஏற்று கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவி விலக உள்ளதை அடுத்து கிறிஸ்டோபர் லக்ஸன் விரைவில் பதவி ஏற்கவுள்ளார்.