சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று 2022ம் ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியர், ஆன்மிகவாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.  மேலும் பல இடங்களில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வழிபாடுகளும், கொண்டாட்டங்களும் கொரோனா அச்சுறுத்திலுக்கு மத்தியிலும் சிறப்பாக நடந்தேறின.

இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.