மும்பை :

காராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மீரா சாலை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன அலுவலருக்கும், பெண் ஆடிட்டருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

வழுக்கை தலையுள்ள அந்த அலுவலர், இதனை மறைத்து பெண் ஆடிட்டரை கல்யாணம் செய்துள்ளார். இது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம். கல்யாணத்தின் போது ‘விக்’ அணிந்து, மணமகளுக்கு தாலி கட்டியுள்ளார், வழுக்கை தலையர்.

அண்மையில் தான், தனது கணவரின் வழுக்கை பெண் ஆடிட்டருக்கு தெரிய வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ,கணவனிடம் சண்டை போட்டுள்ளார்.

அவரது கணவரின் சகோதரிகள் “இது பெரிய விஷயமா என்ன?” என கேட்டு பெண் ஆடிட்டரை திட்டி உள்ளனர்.

தனியார் நிறுவன அலுவலர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் ஆடிட்டர், அங்குள்ள நயாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தனியார் நிறுவன அலுவலர் மீதும், அவரது சகோதரிகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன் ஜாமீன் கேட்டு பெண்ணின் கணவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனால் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

– பா.பாரதி