சென்னை:
வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெறும் 1100 சேவை நாளை துவக்கப்பட உள்ளது.

வீட்டில் இருந்தபடியே குறைகளை சொல்லி 1100 என்ற எண்ணை அழைத்து தேவையான அரசின் சேவையை மக்கள் பெறும் வகையில் முதலமைச்சரின் உதவி மையம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் உதவியைப் பெற 1100 சேவை எண் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை துவக்கி வைக்கிறார். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது குறைகளை 1100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.